“ட்ரீங்..ட்ரீங்” போன் ஒலித்தது.
“என்னங்க நான் அடுப்பு வேலையா இருக்கேன், உங்க போன் ஒலிச்சுக்கிட்டே இருக்கு என்னென்ன தான் பாருங்களேன்”.
‘ரூமின் கதவை உள் பக்கமா சாத்திக்கொண்டு ஃபைலை தேடும் போது, மனைவி சத்தம் போட்டு கூப்பிட்டது கேட்கவே “சரி கலா நான் பார்க்கிறேன்’, என்றான் ராம்.
அறையிலிருந்து அவசர அவசரமாக வெளியே ஹாலுக்கு வந்து ரிஸீவரை எடுத்து ஹலோ! என்றான்”..
“சார், அசோக் ஹியர்” ‘
“மிஸ்டர் அசோக் சொல்லுங்க வாட் யூ வான்ட்?”
“நீங்க வீட்டுமனை ஏதாவது பார்க்கிறீங்களா?”
‘ஆமாம் நாங்க பார்த்து வருகிறோம் “.
“ஒன்றுமில்லை, உங்களுடைய குறிப்பை எனக்கு எங்களுடைய அலுவலகத்திலிருந்து அனுப்பியிருந்தார்கள். அதான் உங்களுக்குப் போன் போட்டுப் பார்த்தேன்”.
“ஓக்கே, எந்த இடத்தில் இருக்கு நீங்க சொல்கிற இடம்?”
“அசோக் நகர் தெரியுமா சார்?” ‘தெரியும் சொல்லுங்க’.
“அங்கே 7ஆம் அவின்யூவில் ஒரு கிரவுண்ட் இருக்கு”.
“எவ்வளவு சொல்ராங்க?”
“அதெல்லாம் நாம இடத்தைப் பார்த்த பிறகு பேசிக்கொள்ளலாமே?”
“அந்த இடத்தின் லைவ் லொகேஷனை கொஞ்சம் ஷேர் செய்ய முடியுமா?”
“இதோ இப்பவே அனுப்புறேன்” போன் துண்டிக்கப்பட்டது “………” இரண்டு மூன்று நிமிடம் ஒரே மௌனம் நிலவியது வீட்டில்.
“என்னங்க யாரு போன்ல?” என்று கூறிக் கொண்டே கலா! சமையல் அறையிலிருந்து வெளியே வந்தாள். ‘அதுவா’மா, ரியல் எஸ்டேடிலிருந்து அசோக் என்பவர் பேசியீருந்தாரு. வீட்டுமனை சம்பந்தமாகத் தான் கூப்பிட்டிருந்தாரு. “நான் அவரிடம் இடத்தின் லொகேஷனை கேட்டிருக்கிறேன்”.
“அப்படியா, எப்போது நாம் போய்ப் பாக்கலாம்?” “உனக்கு இந்த வாரம் சனிக்கிழமை ஆபீஸ் லீவா? “ஆம்” என்றாள் கலா.
‘சரி அப்படினா நான் அசோகிடம் நாங்க இந்த வாரம் சனி கிழமை மத்தியம் வருகிறோம் என்று சொல்லிவிடுகிறேன்.
***
கார் உதிரி பாகம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் இன்ஜினியராக ராம் பணிபுரிகிறான். கலா, சாப்ட்வேர் கம்பெனியில் புரோகிராமராக வேலை செய்கிறாள். நல்ல வருமானம் இருவருக்கும், சுமார் வருடம் ஏழு லட்சம் சி.டி.சி வாங்குகிறான் ராம். கலாவும் இவன் வாங்கும் அளவிற்கு ஈடாகச் சம்பளம் பெறுகிறாள்.
வருடத்திற்குப் பார்க்கப் போனால் இருவரது சம்பளமும் பிடித்தம் போகச் சுமார் பன்னிரண்டு லட்சம் கைக்கு வரும். அதனாலேயே அவர்கள் ஒரு சொந்த வீடு இருந்தால் நன்றாக இருக்கும் என்று பல வருடங்களாக இடம் தேடி வருகின்றனர்.
தற்போது இருவரும் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் 500 சதுர அடி இடத்தில் அவர்களது வாழ்வை நடத்திவந்தனர். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லையென்பதாலேயே, இப்போது மும்முரமாக வீட்டுமனை வாங்க முயலுகிறார்கள், அதில் ஒரு சிறிய வீடு கட்டவேண்டும் என்று ஆசை. பிள்ளைகள் பிறந்தவுடன், அனைவரும் புது வீட்டில் வசிக்கத் துடங்கிடலாம் என்று யோசித்திருந்தனர்’.
சனி கிழமை காலையில் வீட்டு வேலையை எல்லாம், ஒவ்வொன்றாகச் செய்யத் தொடங்கினாள். வீட்டை கூட்டி துடைத்து, வாஷிங் மிஷினில் அழுக்குத் துணிகளையெல்லாம் அதனுள் போட்டு, மிஷினை ஆன் செய்து விட்டுக் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பதினொன்று ஆகியிருந்தது. அவசர அவசரமாகக் குளியலறைக்குச் சென்று தண்ணீரை மடமடவென்று மேலே ஊற்றிகொண்டு பத்து நிமிஷத்தில் வெளியே வந்தாள்.
வெளியே வந்தவள் துணியை மாற்றிக்கொண்டு சமயல் அறைக்குச் சென்று, மத்திய உணவை ஏற்பாடு செய்தாள். இதற்கு இடைப்பட்ட வேளையில், ராம் ஸ்கூட்டரை துடைத்து, வாஷிங் மிஷினிலிருந்து துணிகளை எடுத்துக் கொடியில் உலர்த்தினான்.
பிறகு, அவனும் குளித்து விட்டு மத்திய சாப்பாட்டிற்கு ரெடியானான். இருவரும் சாப்பாட்டைச் சாப்பிட்ட பின், ஏற்கெனவே பேசியபடி கிளம்ப ஆரம்பித்தனர். கலா வெளியே வர சிறிது தாமதம் ஆனவுடன் ராம் அவளைக் கூப்பிட ஆரம்பித்தான்.
“ஏண்டிமா கலா கிளம்பியாச்சா?”
“என்னங்க சும்மா தொனத்தொனன்னு கூப்பிட்டுக்கிட்டே இருந்தா எப்படிக் கிளம்ப முடியும்?”
“சரி, நான் இனி உன்னைக் கூப்பிடல, கொஞ்சம் சீக்கிரம் ரெடியாயிட்டு வெளியே வந்தா போதும்”
“இதோ இரண்டு நிமிஷம் கொடுங்க வந்துடுறேன்”.
அறையின் கதவு திறக்கப்பட்டது, கலா அறையினுள்லிருந்து வெளியே வந்தாள். “வாங்க போகலாம், ஏன் இன்னும் இங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கீங்க?”
ராம், அவளை அப்படியே கண்ணோடு கண் பார்த்தான். “……” ‘சில விநாடிகள் இருவரிடத்திலும் மௌனம் நிலவியது’.
‘மௌனத்தை உடைத்த கலா’
“சும்மா அப்படிக் குறுகுறுனு பார்க்க வேண்டாம் கிளம்புங்க உடனே”
“சரி சரி, மூக்கு மேல் கோபம் வந்துவிடுமே உனக்கு”. முகப்பு கதவை சாத்தி விட்டு வெளியே வந்தனர்.
ராம் ஸ்கூட்டரை உதைத்தவுடன் ஸ்கூட்டர் ஸ்டார்ட் ஆகிவிட்டது, “டப்பு..டப்பு டப்பு….ட்ரூ..ட்ரூ” என்று சத்தம் எழுப்பியது வண்டி. கலாவும் ஸ்கூட்டர் பின் புறம் அமர்ந்துகொண்டாள். உடனே ஸ்கூட்டர் விரைந்தது அந்த இடத்தின் லொகேஷனை நோக்கி. ஒரு மணி நேரம் வண்டியில் பயணம் செய்த பிறகு, பார்க்க வேண்டிய இடத்தை வந்து அடைந்தனர் இருவரும்.
“ஹலோ சார்!” “ஹலோ மேடம்!”
“ஐ’ம்’…அசோக்”
“ஹலோ ஹவ் ஆர் யூ?”
“சார் ஐ’ம்’ ஃபைன்”
“சொல்லுங்க எந்த இடம்?” இதோ இப்படி வாங்க, இங்க பாருங்க மொத்தம் ஒரு கிரவுண்ட் இருக்கு.”
“உங்களுக்கு வேண்டுமானால் நீங்க அரைக் கிரவுண்ட் எடுத்துக்கொள்ளலாம்”.
‘இதில அட்வான்டேஜ் ஒன்று உள்ளது, யார் முதலில் நிலத்தை வாங்குகின்றார்களோ! அவர்கள் இந்த நிலத்தின் முகப்பு பகுதியை வைத்துக்கொள்ளலாம். பிறகு உள்ள நிலத்தை வாங்குகின்றவர்களுக்கு நிலத்தின் பின் புறம் தான் அமையும்’.
***
ராம் மற்றும் கலாவிற்கு, இடத்தைப் பார்த்த உடனே அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது, அசோகிடம் விலை என்ன என்று கேட்டனர்.
“ஓனர் ஒரு கிரவுண்ட் என்றால் ஒரு விலை சொல்லுராரு, பாதிப் பாதியாக வாங்கினால் வேறு விலை”.
“ஓக்கே, சொல்லுங்க என்ன விலை முழுக் கிரவுண்டுக்கு?” சதுர அடி 6000 ரூபாய், “உங்களுக்கு எத்துணைச் சதுர அடி வேண்டும்?””எங்களுக்கு அரைக் கிரவுண்டு வேண்டும்”.
“அப்படினா மொத்தம் நீங்க 1200 சதுர அடி கேட்கிறீங்க”.
“கரெக்ட், எங்களுக்குப் பாதிக் கிரவுண்டுதான் வேண்டும், அதுவும் முகப்பு பகுதி”.
“ஆல்ரைட் சார், முழுக் கிரவுண்டை நான் சப்-டிவிஷன் செய்ய வேண்டும் முதலில்”. 1200 சதுர அடியாக இரண்டாகப் பிரிக்க வேண்டும். ‘டோக்கன் அட்வான்ஸ் கொடுத்தா நான் அடுத்த வேலையை ஆரம்பித்து விடுவேன்’.
ராம் மற்றும் கலா, இருவரும் தங்களின் முகத்தை ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டனர். “ராம், அவளிடம் கேட்டான் என்ன கலா? இடம் புடிச்சிருக்கா?” ‘அவள் “இவ்வளவு வருஷமா பார்த்ததுல” இந்த இடம் கொஞ்சம் நல்லா இருக்கிற மாதிரி தெரியிது, அதனால் பேசாம இந்த இடத்தை முடித்து விடுங்கள் என்றாள்’.
“அவன் உடனே அசோகிடம், முடிவா சதுர அடி ரேட்டை ஃபைனல் செய்யுங்க’ என்றான். நாங்க இந்த அரைக் கிரவுண்டை வாங்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்.”.
“அசோக் இவர்களிடம் சொன்னான், நான் முதலிலேயே சொன்ன மாதிரி சதுர அடி 6000 ரூபாய்”
“சதுர அடி 6000 ரூபாய் ரொம்ப அதிகம் கொஞ்சம் குறைத்து சொல்லுங்க”.
“இதில் எனக்கு ஒன்னும் லாபமில்ல, ஓனர் என்ன சொன்னாரோ அதைத்தான் நான் உங்களுக்குச் சொன்னேன்”.
“முடிவாக ‘எவ்வளவு’ன்னா கொடுப்பார்”.
“சதுர அடி 5800 ரூபாய் என்றால் கொடுப்பார்”.
“நன்றாக யோசித்த பிறகு தான் சொல்கிறேன், சதுர அடி 5500 ரூபாய் என்றால் உடனே நாங்க இந்த இடத்தை வாங்கிக் கொள்கிறோம். வேண்டுமானால் போன் போட்டு ஓனரிடம் பேசி ஒரு முடிவை எங்களுக்குச் சொல்லுங்க”.
***
தொலைப்பேசியில் பேசிய பிறகு அசோக் இவர்களிடம் சதுர அடி 5500 ரூபாய் ஓக்கே என்று கூறி விட்டார் ஓனர் என்றான். இவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி, இருந்து இருந்து ஒரு நல்ல இடம் அமைய போகிறது என்று மனதில் ஓர் இனம் புரியாத ஆனந்தம்.
“அசோக் இவர்களிடம் கேட்டான், டோக்கன் அட்வான்ஸ் எவ்வளவு கொடுக்குறீங்க?”
“உங்களுடைய ஜீ.பேவில் டோக்கன் அட்வான்ஸாக 5000 ரூபாய் உடனே செலுத்துகிறேன்” என்றான் ராம்.
“நான் உங்களுக்குக் கம்பெனி ரூல்ஸ் தெரிவிக்கிறேன். ஏனெனில் முதலில் சப்-டிவிஷன் செய்ய வேண்டும். அதற்குச் செலவாகும், அதை ஓனர் கொடுக்க மாட்டார்”. நீங்கள் தான் இந்தக் கிரவுண்டை வாங்கும் பணத்திலிருந்து சப்-டிவிஷன் சார்ஜை செலுத்தவேன்டும்.
“சப்டிவிஷன் செய்வதற்குக் குறைந்தது எவ்வளவு செலவாகும்?” “அரசாங்க வேலை அல்லவா குறைந்தது ஒரு லட்சம் ஆகும்”.
“நீங்கள் எனக்கு இரண்டு தவனையாகச் செலுத்துங்கள். நான் மற்ற காரியங்களைப் பார்கிறேன்”.
“இல்லை முதலில் இடத்துனுடைய பத்திரத்தின் நகல் எங்களுக்கு வேண்டும்”. அதை நாங்கள் எங்கள் அட்வகேட் இடம் காண்பித்து வில்லங்கம் ஏதேனும் உள்ளதா என்று சரி பார்த்த பிறகு நீங்க கேட்ட தொகையைக் கொடுக்க முடியும்”.
“அதுவும் சரிதான், இன்று சாயங்காலம் நான் உங்களிடம் இந்த இடத்தின் பத்திரத்தின் நகலை தருகிறேன்”. இதற்குப் பிறகு ராம் மற்றும் கலா தங்களுடைய ஸ்கூட்டரில் கிளம்பி வீடு வந்தடைந்தனர்.
***
சாயங்காலம் அசோக் சொன்னபடி பத்திரத்தின் நகலை ராமிடம் கொடுக்க. அதை வாங்கிப்பார்த்த ராம், அசோக்கிடம் எங்களுக்குக் குறைந்தது மூன்று நாட்கள் அவகாசம் வேண்டும் என்று பதிலளித்தான். இந்தப் பத்திரத்தின் நகலை எங்களுடைய அட்வகேட் இடம் கொடுத்து வில்லங்கம் சரிபார்த்த பிறகு, நான் உங்களுக்குப் போன் போட்டுப் பேசுகிறேன் சரியா?” என்றான் ராம்..
அடுத்த நாள் அட்வகேட் இடம் பத்திரத்தின் நகலை கொடுத்து சரி பார்க்க சொன்னான் ராம். அட்வகேட் பத்திரத்தை வாங்கிப் பார்த்துவிட்டு, “உங்களுக்கு ஓரல் கன்சல்டேஷன் வேண்டுமா? அல்லது ரைட்டப்பில் வேண்டுமா என்று கேட்டார்”.
“அட்வகேட் சார், எங்களுக்குக் கிளியரன்ஸை ரைட்டப்பில் கொடுத்துடுங்க அதான் சரியாக இருக்கும்” என்றான் ராம்.
“அப்போ போயிட்டு, இரண்டு நாள் கழித்து வாங்க என்னுடைய டீம் இதை அனைத்தையும் ஸ்கூர்டனைஸ் செய்து எனது பார்வைக்கு வைப்பார்கள். நான் அதை ஒரு தடவை பார்த்துவிட்டு உங்களுக்கு ரைடிங்கில் கொடுத்துடுறேன்.“
இரண்டு நாள் ஆனவுடன் ராம் அட்வகேட் இடம் போன் போட்டுப் பேசினான். அட்வகேட் இன்னும் இரண்டு நாள் வேண்டும் என்று அவனிடம் கூற. அவனும் சரியென்று கூறினான். இதற்கிடையில் அசோக் போன் போட்டு “சார் என்ன ஆச்சு?”
“எங்களுக்கு, அட்வகேட் இன்னும் பேப்பரை கொடுக்க வில்லை இன்னும் இரண்டு நாள் தவனைக் கேட்டிருக்கிறார். மேலும் இரண்டு நாட்கள் வேண்டும் என்றான்” ராம்.
ஆனால் மறு முனையில்,. “பேப்பர் வரது வரட்டும், நீங்க கொடுக்க வேண்டிய அட்வான்ஸ் அமௌன்ட் கொடுத்தா நல்லா இருக்கும் என்றான் அசோக். மேலும் இதை ராமிடம் கூறினான். நிறைய நபர்கள் வந்து இதே இடத்தைப் பார்த்துவிட்டுப் போய்யிருக்கிறார்கள்”. அவர்கள் எல்லாம் டோக்கன் அட்வான்ஸா லட்ச கணக்கில் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். “நான் தான் உங்களிடம் டோக்கன் அட்வான்ஸ் வாங்கியதால் ஒன்றும் பேசாமல் இருக்கிறேன் என்றான்.”
“எப்படிப் பேப்பர் வராமல் கொடுப்பது?” என்றான் ராம்.
“இந்த இடம் எந்த வில்லங்கமும் இல்லாத இடம். என்ன நம்பி பணத்தைக் கொடுங்க, நான் உங்களுக்கு ரிசிப்ட் தருகிறேன் என்றான்” அசோக்.
‘சிறிது நேரம் யோசித்து விட்டு சரி நான் உங்களுக்குப் பார்ட் பேமென்ட் தருகிறேன் அதற்கு ரிசிப்ட் கொடுங்க என்றான்.” ‘எப்போதும் முடிவெடுக்கும் முன்னர்க் கலாவிடம் ஒரு வார்த்தை கேட்பான் ராம். ஆனால், இந்த முறை ஏனோ அவன் அவளிடம் கேட்கவில்லை.’
***
மறுநாள் காலை எழுந்தவுடன் அவளிடம் கூறினான். “கலா நான் உன்னிடம் கேட்காமலே அட்வான்ஸ் அமௌன்ட் கொடுப்பதாகச் சொல்லிவிட்டேன் அசோகிடம்.” ‘அவள் ஒரு வினாடி யோசித்தாள் “……” மௌனம் நீலவியது அங்கு. அவளது மௌனதிற்க்கு அர்த்தம் என்னவென்றால் சம்மதம் என்றே பொருள், ஏனெனில் இருவருக்கும் அந்த இடம் பிடித்திருந்தது.
பிறகு குளித்து முடித்த பின்னர்க் காலை உணவு உண்ட பிறகு, ராம் நேரே லாக்கரில் உள்ள காசோலையை எடுத்து அதில் அட்வான்ஸ் அமௌன்டை எழுதி தன் பையில் வைத்துக்கொண்டு அசோக்கை பார்க்க சென்றான்.’
செல்லும் வழியில் அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது, ‘ஒரு முறை ஏன் நாம் அட்வகேட் இடம் நேரே சென்று பார்க்க கூடாது. முடிந்தால் அவர்களிடம் நேராக ஒபினியன் வாங்கி விடலாம். பிறகு அசோகிடம் போய் அட்வான்ஸ் அமௌன்டை கொடுக்கலாம் என்று மனதில் எண்ணியவுடன். நேரே ஸ்கூட்டரை அட்வகேட் இடத்திற்குச் செலுத்தினான்.’ “அங்கு வந்து அவர்களிடம் நேரே கேட்டான்”., “பதில் அவர்கள் சாதகமாகச் சொன்னார்கள்.” அதாவது பத்திரத்தில் வில்லங்கம் ஏதும் இல்லை என்று. நாளை வாங்க ரைட்டப்பில் கொடுத்துவிடுகிறேன் என்று அட்வகேட் கூறினார் ராமனிடத்தில்.”
உடனே காசோலையை எடுத்துக்கொண்டு அசோக்கை பார்க்க சென்றான் ராம். கிளம்பும் முன்னர் மறுபடியும் ‘ஒரு முறை அட்வகேட் இடம். சார், எல்லாம் சரி தானே? ஏனெனில் நான் அட்வான்ஸ் அமௌன்ட கொடுக்கப் போறேன்.’
“எவ்வளவு அட்வான்ஸ் அமௌன்ட கொடுக்கப் போறீங்க?”
“முதல் தவனையாய் 25000 ரூபாய் கொடுக்கப் போகிறேன், பிறகு படிப்படியாகப் பணத்தைக் கொடுத்துவிடுவேன்”.
“ஓக்கே, பணத்தைக் கொடுங்க பத்திரத்தில் வில்லங்கம் ஏதும் இல்லை அதனால் நீங்க கொடுக்கலாம்”.
“நன்றி,” நாளை வந்து ரைட்டப்பில் வாங்கிக்கொண்டு போகிறேன்”.
ஸ்கூட்டரில் கிளம்பி நேரே அசோக் இருக்கும் இடத்திற்கு வந்து அடைந்தான் ராம். தன் பையில் உள்ள காசோலையை எடுத்து அசோகிடம் கொடுக்க, அதை அசோக் முக மலர்சியுடன் பெற்றுக் கொண்டான். அசோகிடம் லோன் வாங்கித் தான் இந்த இடத்தை வாங்குறோம் என்றான் ராம்.
“, உடனே அசோக், நாங்கள் எங்களுக்குத் தெரிந்த வங்கியில் லோன் ஆர்கனைஸ் செய்திடுவோம்”.
“இல்லை எனக்குத் தெரிந்த நபர் இருக்கிறார். அவர் மூலம் நான் லோன் பெற்றுக் கொள்வேன்”. என்று கூறி அந்த இடத்தை விட்டுக் கிளம்பினான் ராம்.
போன் போட்டுத் தனக்குத் தெரிந்த லோன் கொடுக்கும் நபரிடம் அப்பாயின்மென்ட் கேட்டுப் பேசினான். அவர் ஒரு தேதி சொல்லி ராமை அவரிடத்திற்கு வரச் சொன்னார். இரண்டு மூன்று நாட்கள் அப்படியே சென்றது. மீண்டும் அட்வான்ஸ் அமௌன்டை கேட்டு அசோக் போன் போட்டு ராமிடம் கேட்க. இப்ப தான் கொடுத்தேன் அல்லவா என்று ராம் சொல்ல.
“உங்களிடம் நான் தான் அரசாங்க வேலை என்று ஏற்கனவே சொன்னேன் அல்லவா பணம் இருந்தால் மட்டும் காரியம் நடக்கும் இல்லை என்றால் அப்படியே போட்டு விடுவார்கள்.”
“சரி, நாளை உங்களைப் பார்க்கிறேன். நான் உங்களைப் பார்க்கும் போது ஒரு பார்ட் பேமென்ட் செய்றேன்”. என்றான் ராம்.
***
அடுத்த நாள், காலை அலுவலகம் செல்லும் முன்னர் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து ஒன்பதிலிருத்து பத்து மணிக்குள் அசோக் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான். அவன் முன்னரே சொல்லியிருந்த மாதிரி அவன் எடுத்து வந்த பணத்தை அசோகிடம் கொடுத்துவிட்டு, சப்-டிவிஷன் பேப்பர் எப்போது கைக்கு வரும் என்று கேட்டு விவரம் அறிந்து கொண்டு நம்பிக்கையுடன் அலுவலகம் கிளம்பும் சமயத்தில்.
“ட்ரிங்..ட்ரிங்” தொலைப்பேசி மணி அடித்தது. யார் என்று பார்க்கையில் அந்தப் பக்கம் அவனது நண்பர். அவர்தான் வங்கி லோன் ஆர்கனைஸ் செய்து பொடுப்பவர் என்று அறிந்துகொண்டவுடன்.
“ஹலோ! சார், எப்படி இருக்கீங்க?””
“கடவுள் புன்னியத்தில் நல்லா இருக்கிறேன் ராம்” “நீங்க சிறிது நேரம் என்னுடைய ஆபீஸுக்கு வர முடியுமா?”
“அதற்கு என்ன, கட்டாயம் வருகிறேன்” பக்கத்தில் தான் உள்ளது உங்க ஆபீஸு”.
நண்பரின் ஆபீஸுக்கு விரைந்தான் ராம். அங்கு அவரைப் பார்த்து லோன் சம்பந்தமாகச் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பும் சமயத்தில் ராமின் நண்பர் “ எந்த இடம் என்று சொன்னீர்கள்?”
“அதான், அசோக் நகர் 7வது அவின்யூ, இதைக் கேட்ட பிறகு “. “………” ‘சிறிது நேரம் ராமுடைய நண்பர் மௌனமாக இருந்தார்’
‘மௌனத்தை உடைக்கும் வகையில் ராம் அவரிடம் ஏன் சார் மௌனம் என்றான்.
“ஒன்னுமில்ல பத்திரத்தையெல்லாம் சரிவர அட்வகேட் இடம் கொடுத்து சரிபார்த்தாச்சா?”
“அதெல்லாம் அட்வகேட் வந்து வில்லங்கமெல்லாம் இல்லை என்று சொன்ன பிறகுதான் அட்வான்ஸ் அமௌன்ட் எல்லாம் கொடுத்திருக்கிறேன்.”
“சுமார் எவ்வளவு அட்வான்ஸ் கொடுத்திருக்கீங்க”.
“அது வந்து, வந்து”
“சும்மா சொல்லுங்க”
“சுமார் ஒரு லட்சம் கொடுத்திருக்கிறேன்”
“நான் சொல்றதை தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்.” நீங்க சொன்ன இடம் ஆர்க்கியாலஜி டிபார்ட்மென்ட் கீழே வரும் போல் தோன்றுகிறது.”
“ஒரு முறை முனிசிபல் கார்ப்பரேஷன் சென்று அவர்களிடம் அந்த இடத்தைப் பற்றி விசாரிங்க முதலில்.” பிறகு மற்ற ஃபார்மாலிடீஸ் எல்லாம் செய்யலாம்”.
“என்ன பயமுறுருத்துறீங்க”.
“பயப்பட வேண்டாம் முதலில் போய் விசாரிங்க, ஒரு வேளை அந்த இடம் ஆர்க்கியாலஜி டிபார்ட்மென்ட கீழ் வரவில்லை என்றால் நல்லதுதானே!”
“சரி, நான் முதலில் போய் விசாரிக்கிறேன்”.
“அசோகிடம் கூறினான் ராம், எனக்கு இப்போதுதான் தெரியவந்தது நீங்க எங்களுக்குக் காண்பித்த இடம் ஆர்க்கியாலஜி டிபார்ட்மென்ட் கீழ் வருகிறதாமே?”.
“அப்படியா சார்”, “அப்படி அஃது உண்மையா இருந்தால் நாங்க உங்களுக்கு என்.ஓ.சி வாங்கிக் கொடுத்திடுவோம்”
“யாரிடமிருந்து என்.ஓ.சி வாங்கிக் கொடுப்பீர்கள்”
“அரசாங்கத்திடமிருந்து தான்” குழப்பத்துடன் அலுவலகம் செல்லாமல் வீடு திரும்பினான் ராம்.
***
மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டிருந்தது இந்த விஷயம். ராம் யோசிக்கத் தொடங்கினான், எங்குக் கேட்பது யாரை நாடுவது என்று இருக்கையில். அவனுக்கு ஒரு யோசனை உதித்தது. ‘ஏன் கூகிலில் தேடி பார்க்க கூடாது. அதில் ஆர்க்கியாலஜி டிபார்ட்மென்டைப் பற்றித் தகவலிருந்தால்! ‘ஏன் நாம் அதிலிருந்து எடுத்து அவர்களிடம் உதவி கேட்க கூடாது?’ பெரிய போராட்டத்திற்குப் பிறகு தகுந்த நபரின் விவரங்களை எல்லாம் சேகரித்துக் கொண்டு. அவரிடம் மின் அஞ்சல் மூலம் தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தைக் கேட்டான்.’
இரண்டு தினங்களுக்குள் ஆர்க்கியாலஜி டிபார்ட்மென்டிலிருந்து பதில் வந்திருந்தது. பதிலை படித்தவுடனே கவலையில் ஆழ்ந்தான் ராம். ஏனெனில் பதில் அவனுக்குச் சாதகமாக இல்லை. இவர்கள் அட்வான்ஸ் கொடுத்து வாங்க போகும் இடம் சரியாக ஆர்க்கியாலஜி டிபார்ட்மென்ட் கீழ்தான் வருகிறது.. அந்த மின் அஞ்சலில் தாங்கள் இடத்தை வாங்க வேண்டாம், ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும் அரசாங்கம் நிலத்தைத் தோண்டி பார்க்க வாய்ப்பு உள்ளது என்று எழுதியிருந்தது.
அடுத்த நாள் காலை, அவன் முனிசிபல் கார்ப்பரேஷன் சென்று அங்கும் விசாரித்தான். அவர்களும் இடத்தை வாங்க வேண்டாம் என்று தான் சொன்னார்கள். பதற்றத்துடன் அட்வகேட் இடம் வந்து நிலவரத்தை சொன்னான்.
“அதற்கு அட்வகேட் நாங்க பத்திரத்தில் வில்லங்கம் ஏதேனும் உள்ளதா என்று தான் பார்ப்போம். மற்றது எல்லாம் நீங்க தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டார்”. என்ன செய்வது என்று தெரியாமல் அசோகிடம் வந்து பணத்தைத் திருப்பித் தரும்படி சொன்னான்.
“சார் வேறு இடம் வேண்டுமானாலும் நான் காட்டுகிறேன் என்று ராமிடம் சொல்ல.”
“வேறு வழியின்றி இரண்டு இடத்தைப் பார்வையிட்டனர் ஆனால் எதுவும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை”
“பணத்தைத் திருப்பிக் கேட்டனர்”
“சப்டிவிஷன் செய்வதற்குக் கொடுத்து விட்டேன், இந்த நிலத்தை விற்றுதான் உங்களுக்குப் பணம்தர முடியும் என்று கூறி விட்டான்.“அசோக்.
வருஷங்கள் உருண்டோடியது, ஒன்று, இரண்டு, மூன்று….. என வருடங்கள் சென்றது தான் மிச்சம். இவர்களது பணம் இவர்கள் கையில் திரும்பி வரவில்லை.
“எப்ப அசோகிடம் கேட்டாலும் நிலத்தை விற்றுதான் பணத்தைத் தர முடியும் என்று ஒரே பதிலை கூறிக் கொண்டு வந்தான்.
எவ்வளவோ முயற்சி செய்து பார்த்த பின்பு கூட இவர்களால் அசோகிடமிருந்து பணத்தை வாங்க முடியவில்லை. ‘ராம் ஒரு கட்டத்தில் எண்ணினான் அசோக் பொய் மேல் பொய் சொலிக் கொண்டுதான் இருக்கிறான் என்று. ’ அவனிடத்திலிருந்து ‘பணத்தைத் திருப்பிக் வாங்குவது என்பது முடியாத காரியம்.’ ‘எப்படி இவனிடமிருந்து இந்தப் பணத்தைத் திருப்பிப் பெற்றுக் கொள்வது’. ‘போலீஸிடம் செல்லலாமா?’ ‘இல்லை என்றால் கட்டப் பஞ்சாயத்து செய்யும் நபர்களை பார்க்கலாமா? இவர்களிடம் சென்றால் நாம் அலைய வேண்டியது இருக்கும். ‘அப்படி அவர்களிடம் செல்வதாக இருந்தால் முதல் வருடத்திலேயே போயிருந்திருக்கலாமே.’ என்ன செய்யலாம்? இந்த மூன்று வருஷங்களாக யோசித்துக் கொண்டிருந்த ராமுக்கு.
கடைசியாக அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது ஏன் நாம் முகநூலில் அசோக் நம்மிடம் கொடுத்த ரிஸிப்ட் எல்லாத்தையும் சேர்த்து அவனுடைய போட்டோவையும் அதனுடன் இணைத்து, இந்த மாதிரி இவன் என்னை ஏமாற்றி விட்டான்.’ ‘அனைவரும் சற்று ஜாக்கிரதையாக இருங்கள்.’ ‘இந்த நபரிடம் பணம் கொடுக்கும் முன் ஒரு தடவைக்கு மேல் யோசித்து விட்டுப் பணத்தைக் கொடுங்க என்றெல்லாம் அதில் எழுதி முகநூலில் பகிரிந்தான் ராம்’.
மூன்று வருஷங்களாகப் போராடிய ராமுக்கு ஒரு மாதத்திற்குள் போன் வந்தது.
“சார், நான் அசோக் பேசுறேன்”
“என்ன அசோக் மூன்று வருஷமாக நாங்க தான் போன் போட்டு உன்னுடன் பேசுவோம்.”
“முதல் முறையாக நீ எங்களுக்குப் போன் போட்டு பேசிக் கொண்டிருக்கிறாய் என்றான் ராம்.
“நான்தான் தருகிறேன் என்று சொல்றேன் அல்லவா பிறகு ஏன் முகநூலில் என்னைப்பற்றிப் பகிர்ந்தீர்கள்?”
“நாங்க ஒன்றும் பொய் சொல்லவில்லை. மூன்று வருஷங்களாகப் போராடி பார்த்தோம் ஆனால் உன்னிடமிருந்து ஒரு பைசா கூட வாங்க முடியவில்லை.’
அதான் எல்லா ஆதாரத்தையும் இணைத்து முகநூலில் பகிர்ந்தேன். என்னைப் போன்று வேறு யாரேனும் இது போன்று மாட்டிக் கொள்ளக் கூடாதுனு தான்.”
“முகநூலிலிருந்து அந்தப் பதிவை நீக்குங்கள்”. “நான் உங்கள் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்”. ‘நீங்கள் போட்ட இந்தப் பதிவால் என் வேலை பறிபோனது எனது கம்பெனியிக்கு யாரும் வர மாட்டேங்கிறாங்க’.
“அசோகிடத்தில் பதிலளித்தான் ராம், சரி பணத்தைக் கொடு நான் பதிவை நீக்கி விடுகிறேன்”
இதற்குப் பிறகு ராம் மற்றும் கலாவிற்குச் சிறிய தெம்பு வந்தது.
“அவர்களுடைய பணம் அவர்களிடம் திரும்பி வந்து விடுமென்று.”